Wednesday, April 15, 2009

இனிய புத்???!!!.....

நீங்கள் நினைப்பது புரிகிறது, என்னடா தலைவர் மட்டும் புத்தாண்டுக்கு ஒன்றும் போடமல் இருந்தார் (பதிவைச் சொன்னேன்) இப்போது அவரும் ஆரம்பித்து விட்டார்யென்று,

ன்ன செய்வது, தலைவருக்கு புத்தாண்டு அன்று விடிந்ததிலிருந்து 'குட்டி மேட்டர்' சேவையிலும் (sms), வாய்ப்பேசியிலும் (கை எப்படி பேசும், ஆனால் நமது கட்சியின் குண்டர் படையில் கையும் பேசும்) புத்தாண்டு வாழ்த்து வந்த வண்ணம் இருந்தது, எல்லோருக்கும் பதில் வாழ்த்து சொல்லிவிட்டு, வலைப்பதிவில் பார்த்தால் அங்கும் அதே. எல்லா பதிவர்களும் தமிழ் வருடத்தின் முதல் நாள் எப்படியாவது பதிவு போட்டு விட வேண்டுமென்று எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துயென்று ஒரு பதிவை போட்டு விட்டார்கள். அதை முடித்து தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தால் நமது கட்சிக்கும், குண்டர் படைக்கும் ஏற்றவாறு சில படங்களை காண்பித்தார்கள். நல்ல வேளை எந்த காக்கா, குருவி படமும் போடவில்லை. அத்துடன் முன்பெல்லாம் நமது கட்சிக்கே சவால்விடும் படி முதல் நாள் விடியற்காலை 4 மணியிலிருந்து அடுத்த நாள் 4 மணி வரை தொலைக்காட்சி பார்த்தால் பரிசாக லாரி தருவது, கப்பல் தருவது ,ஏரோப்பிளேன் தருவது இதெல்லாம் இப்போது மாறியுள்ளது. ஆனால் இப்போதும் டப்பாங்குத்து ஆட்டம் போட்டுவிட்டு, மொக்க ஜோக் சொல்லிவிட்டு, இந்த நம்பருக்கு மெஸேஜ் அனுப்பு, அந்த நம்பருக்கு மெஸேஜ் அனுப்பு என்பதும் நிற்க வேண்டும். தலைவர் நிறைய மெஸேஜ் அனுப்பி அழிந்துவிட்டார்.

நாங்கள் அரியணை ஏறினால் இது எல்லாவற்றையும் நிறுத்தி எங்களுக்கு மட்டுமே மெஸேஜ்ஜை பின்னுட்டமாக அனுப்ப வேண்டுமென்று கட்டளையிடுவோம்.

புத்தாண்டான்று வருத்தமளிக்கும் ஒரே விசயம், எந்த ஒரு பெரிய விண்கல்லின் படமோ (அதாங்க நட்சத்திரம்), எரிக்கல்லின் படமோ வெளியாகவில்லை.

1 comment: